கோவை அருகே ஊருக்கு புகுந்த யானைக் கூட்டம்..! அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்..!

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் காட்டு யானைக்கூட்டம் நுழைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் உலா வந்த யானைக்கூட்டத்தை வனத்துறையினர் உதவியுடன் அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன.

இவைகள், உணவு தேடி மலையடிவாரப் பகுதிகளுக்கு வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய 8 காட்டு யானைகள் கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன.



இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரின் உதவியுடன், ஊருக்குள் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தை அப்பகுதி மக்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல நேற்று அதிகாலை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு ஒற்றை யானை புகுந்துள்ளது. கோடை வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதால், தண்ணீர் மற்றும் உணவுதேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...