கிணத்துக்கடவு அருகே பெயிண்டர் தற்கொலை - குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் விபரீதம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பெயிண்டர் ஆனந்த குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடிப்பழக்கத்தை நிறுத்துவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர், தோட்டத்து சாலையில் குடியிருந்து வந்தவர் ஆனந்தகுமார் (வயது 38). இவர் பெயிண்டிங் வேலை செய்து செய்து வந்தார். இவருக்கு பாரதி (31) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் உள்ளதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், அவரது குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை கூறியும் கேட்காமல் மீண்டும் வேலைக்கு செல்லாமல், மதுப்பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால், நேற்று காலை ஆனந்தகுமார் மனைவி பாரதி குழந்தைகளுடன் கோவைக்கு சென்றார். வீட்டில் ஆனந்தகுமார் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

கோவைக்கு சென்ற பாரதி வீட்டுக்குவந்து பார்த்தபோது ஆனந்தகுமார், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆனந்தகுமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அவரது மனைவி கொண்டு சென்றார்.

அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...