உடுமலையில் கழிவு நீர் வாகனங்களை பதிவு செய்து உரிமம் பெற நகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!

உடுமலை நகராட்சியில் உள்ள கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் குறித்த தகவல்களை நகராட்சியில் பதிவு செய்து, 2 ஆண்டுகள் செல்லும் வகையிலான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் சத்தியநாதன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உடுமலை நகராட்சியில், மனித கழிவுகள், கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால், 2 ஆண்டு செல்லும் வகையில், விண்ணப்பித்த 15 நாட்களில் உரிமம் வழங்கப்படுகிறது.



எனவே, கழிவுநீரை அகற்றும் வாகனங்கள் குறித்து, உடுமலை நகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை, பொது இடங்களில் கொட்டக்கூடாது. நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...