பல்லடம் அருகே பெய்த திடீர் மழையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - 2 வீடுகள் முற்றிலுமாக சேதம்!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் திடீரென பெய்த மழையால் சுற்றுச்சுவர் 200 மீட்டர் தூரத்திற்கு இடிந்து விழுந்த விபத்தில் 2 வீடுகள், 2 மாட்டு கொட்டகைகள் மற்றும் 5 கழிப்பறைகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் பகுதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 வீடுகள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே விற்பனைக்காக தனியார் வீட்டுமனை தயாராகி வருகிறது.



இதனிடையே அதை சுற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று மாலை அப்பகுதியில் திடீரென பெய்த மழையில் வீட்டுமனைக்கு அருகே அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரானது சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு முழுமையாக இடிந்து விழுந்தது.



இந்த சுற்றுச்சுவரானது, செட்டி என்ற மூதாட்டிக்கு சொந்தமான வீட்டின் மீது விழுந்ததில் வீடு முழுவதுமாக இடிந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்.



இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து கழிப்பறைகள், இரண்டு மாட்டு கொட்டகைகள் மற்றும் இரண்டு வீடுகள் முழுவதுமாக இடிந்து சேதமடைந்தன.

சுற்றுச்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.



சிவராஜ், விநோத், ரங்கசாமி, பிரபாகரன், ரத்னா, ரமேஷ், கணேசன், தங்காள், சதீஷ், பொன்னுசாமி, அஞ்சனா ஆகியோரின் வீடுகளில் சூறாவளி காற்று சிக்கி மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.



மேலும் குடியிருப்புக்கு அருகே கட்டப்பட்டுள்ள சுற்று சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததாகவும் பலமுறை வீட்டுமனை விற்பனையாளரிடம் தெரிவித்தும் மெத்தனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என‌ அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. வீதிகளிலேயே மின் கம்பிகள் தொங்கியபடி உள்ள நிலையில் மின்வாரிய அதிகாரிகள் பாதிப்பை சரி செய்ய வேண்டும். தங்க இடமில்லாமல் வீதியில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...