தொடர் விடுமுறை எதிரொலி - உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை முறையாக போக்குவரத்தை கையாளாததால் பல மணி நேரமாக சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.


நீலகிரி: உதகைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரம்ஜான் மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கர்நாடகா கேரளாவிலிருந்து சொந்த வாகனங்களில் உதகையை நோக்கி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருவதால் காலை முதலே நகரில் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.



இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் மணி கணக்கில் சாலைகளில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. உதகை காவல் துறையினர் முறையான திட்டமிடாததே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் கூறியதாவது, பேருந்து நிலையத்திலிருந்து பத்து நிமிடங்களில் வர வேண்டிய இடத்திற்கு ஒன்றரை மணி நேரமாக பயணம் செய்து வந்தோம். நகரில் முக்கிய சந்திப்புகளில் மட்டுமே போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற இடங்களில் போலீசார் இல்லாதது தான் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலைகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

நகரில் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில் சில சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...