துடியலூரில் செயின்பறிப்பு - இளைஞரை கைது செய்த தனிப்படை போலீஸ்

கோவை துடியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.


கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி (வயது43).

இவர் கடந்த மார்ச் 20ஆம் தேதி, தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் துடியலூர் தனிப்படை போலீசார் கோவையில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த முருகானந்தம் (வயது26) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் வேறு எங்காவது செயின் பறிப்பில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...