கோவையில் பா.ம.க சார்பில் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - கனரக ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் பெண் கனரக வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவிற்கு (AMR), அன்புமணி ராமதாஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தார்.



கோவை: மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்த காலநிலை மாற்றம் விவகாரத்தில் அவசர நிலை பிரகடனம் என்பதை உலக நாடுகள் அமல்படுத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்நிலை திடலில் நடைபெற்றது. கோவை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில்,இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் கால நிலை மாற்றம் குறித்த தலைப்பில் உரையாற்றபட்டது.



குறிப்பாக அதிக வெப்பம், பருவ கால மாறுபாட்டால் ஏற்படும் கடும் வெப்பம் மற்றும் மழை, மரம் வளர்த்தலின் தேவை, நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம்,சுற்று சூழலை பேணுவது உள்ளிட்டவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் பெண் கனரக வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவிற்கு (AMR) அன்புமணி ராமதாஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தின் முடிவில் பாமக தொண்டரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத நாட்டு சர்க்கரை வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், கோவை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ், மாவட்ட தலைவர் கோவை ரமேஷ், பாமக இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...