மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம் - 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த உடுமலை மாணவர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய்குமார் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இவரது உடல் உறுப்புகள், கோவை மற்றும் சென்னையை சேர்ந்த 8 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் அஜய் குமார் உடுமலைப்பேட்டையில் உள்ள வித்யசாகர் கல்லூரியில் எம்.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கல்லூரி சென்ற மாணவர் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அங்கு சிகிச்சை பலனில்லாமல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர், பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மேல்சிகிச்சை பலனில்லாமல் அஜய்குமார் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து, அவருடைய உடலில் இருந்து எட்டு உறுப்புகள் சென்னைக்கு விமான மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒரு கிட்னி மற்றும் நுரையீரலின் பகுதியை பி எஸ் ஜி மருத்துவமனை பயன்படுத்திக் கொள்வதாகவும், மீதமுள்ள உறுப்புகள் அனைத்தையும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளைச் சாவடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகளின் மூலம் எட்டு பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடுமலையில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...