பென்சில் முனையில் முகக்கவசம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை ஆட்டோ ஓட்டுனர்!

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுனர், பென்சில் முனையில் முகக்கவசம் மற்றும் Wear Mask என்ற வாசகத்தை செதுக்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


கோவை: கோவை காந்திபார்க் பகுதியில் பென்சில் முனையில் முகக்கவசம் போன்ற சிற்பம் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். ஆட்டோ ஓட்டுனரான இவர், கோவையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், பென்சில் முனையில், முகக்கவசம் வடிவத்தையும் அதன் கீழ் WEAR MASK என்ற வார்த்தைகளையும் செதுக்கியுள்ளார்.



முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவரது ஆட்டோவில் ஏறும் அனைத்து பயணிகளுக்கும் வலியுறுத்தியும் வருகிறார். மேலும் முகக்கவசம் இல்லாமல் அவரது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசங்களையும் வழங்கி வருகிறார்.



இவர் இதேபோன்று பென்சில் முனையில் விலங்குகள், மனிதர்கள், பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செதுக்கியுள்ளார். மேலும் அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள I LOVE AUTO என்ற மினி கிராஃப்ட் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...