காஷ்மீர் குண்டுவீச்சில் பலியான ராணுவ வீரர்கள் - கோவையில் அகில பாரத இந்து மகா சபா புஷ்பாஞ்சலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாயினர். அவர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை துடியலூரில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கடந்த 20ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ட்ரக் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு அகில பாரத இந்து மகா சபா தேசிய இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளரும் தென்மாநில இளைஞர் அணி செயலாளருமான டாக்டர் கே.ஆர். சுபாஷ் தலைமை தாங்கினார்.



இதில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த இராணுவ வீரர்களின் படங்களுக்கு ஒவ்வொருவராக மலர்கள் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அனந்தன் , செய்தி தொடர்பாளர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பார்த்திபன், மாநகர் மாவட்ட இளைஞர் அணிசெயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் கணேசன், அர்ச்சகர் பிரிவு மாநில செயலாளர் கார்த்தி சுவாமிகள், மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், ஜெயகுமார், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...