தாராபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தாராபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டுகள் பழமையான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் மையப் பகுதியான சின்னக் கடை வீதியில் நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் பிரமாண்டமாக துவங்கியது. தொடர்ந்து விசேஷ பூஜைகள் அந்தரயாகம், வேதிகார்ச்சனை, மூல மந்திரம், ஹோமம், திரவி ஆகுதி, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதில், 64 வகையான மூலிகை திரவியங்கள் 12 புண்ணிய நதிகளின் மகா தீர்த்தங்கள், கலசங்களில் எடுத்து வரப்பட்டு மருதுரை பட்டீஸ்வர ஸ்வாமி ஆலய அர்ச்சகர் மந்த்ராச்சல சிவாச்சாரியார் தலைமையிலான 12 சிவாச்சாரியார்கள் அடங்கிய குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.

தொடர்ந்து இன்றைய தினம், ஜகத்குரு சிருங்கேரி சாரதா பீடம் பாரதி தீர்த்த சுவாமிகளின் நல்லாசியுடன் தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபையின் கௌரவ தலைவர் ராஜா ராமலிங்கம், தலைவர் சுப்பிரமணி, பெடரேஷன் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.



இதன்படி, காலை 9:00 மணிக்கு புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அம்மன் சன்னதி கோபுரம் உள்ளித்தவைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனை பயபக்தியுடன் வணங்கி வந்தால் தடைபட்ட திருமண காரியங்கள், மனதுக்குப் பிடித்த வரன்கள், குடும்ப ஆரோக்கியம், கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளில் அபரிமிதமான முன்னேற்றம் ஆகியவை நிச்சயம் நடைபெறும் என்பது ஆண்டாண்டு கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.



சிறப்புமிக்க இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் ஆன்மீகம் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...