உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி தலைவர் மீது முறைகேடு எதிரொலி - வட்டாட்சியர் விசாரணை!

உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று வட்டாட்சியர் கண்மணி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது முறைகேடு எதிரொலியாக வட்டாச்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உண்மை என அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கருதி ஊராட்சி மன்ற தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு ஊராட்சிமன்ற தலைவர் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் ஏற்க தகுந்ததாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 12ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டம் உடுமலை தாசில்தார் கண்மணி தலைமையில் நடைபெற்றது. அப்போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் தனித்தனியாக எழுத்துப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக ஊராட்சிமன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? அல்லது தொடர்வாரா? என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...