பாசிச சக்தியால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நந்தினிக்கு உரிய நீதி வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூரைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நந்தினி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நந்தினியை ஏமாற்றி தனது சமூக விரோத கூட்டாளிகளோடு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு கொடூரமாக கொலை செய்த இந்து பாசிச சக்திகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை வரும் வரை குற்றவாளிகளை பிணையில் வெளியிடக் கூடாது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகரை வழக்கில் இணைத்து கைது செய்ய வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநிலக் குழு உறுப்பினர் தி.செ.கோபால், தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோதவாடி ராசன், அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், மாநகர தலைவர் புதூர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஆ.நாகராசன் கண்டன உரையாற்றினார். 

தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் முருகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...