கோவையில் இருந்து கேரளாவுக்கு 5.9 டன் ரேசன் அரிசி கடத்தி சென்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிப்பு!

கோவையில் இருந்து கேரளாவிற்கு 5.9 டன் ரேசன் அரிசியை கடத்தி சென்ற சிவானந்தா காலணி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (48) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு 5.9 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 2008ஆம் ஆண்டு கோவை - பாலக்காடு சாலை குனியமுத்தூர் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக கேரளாவிற்கு ஈச்சர் லாரி மூலம் ரேசன் அரிசியை கடத்தியதாக கோவை சிவானந்தா காலணி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (48), உக்கடம் பகுதியை சேர்ந்த ஆலிப்ராஜா ஆகிய இருவரை கைது செய்து, அவரிடமிருந்து 5.9 டன் ரேசன் அரிசி மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், முதல் குற்றவாளியான அன்வர் பாஷாவிற்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆலிப்ராஜா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதே போல இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட காளிதாஸ் (43), ரவிராஜ் (43) ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அன்வர் பாஷா மீது 8 மாவட்டங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...