கர்ப்பிணிப் பெண் இறப்பு - வால்பாறை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ கந்தசாமி நேரில் ஆய்வு!

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கர்ப்பிணிப் பெண் இறந்ததற்கு காரணம் என்னவென்று மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று கர்ப்பிணி பெண் இறந்ததை அடுத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சந்திரா விசாரணை செய்தார்.

இந்நிலையில் இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறை அரசு மருத்துவமனையில் காலை 8 மணி அளவில் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் கர்ப்பிணிப் பெண் இறந்ததற்கு காரணம் என்னவென்று மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆப்ரேஷன் தியேட்டர் ஊழியர்கள், ரத்த வங்கி,மயக்க மருந்து மருத்துவர் போன்றவர்கள் இல்லாததால் நோயாளிகளை பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்ப நேரிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சில தினங்களாக வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதாலும், வடமாநில தொழிலாளர்களே சிறுத்தை தாக்கி படுகாயம் ஏற்படுத்தி உள்ள நிலையிலும் நேற்று அதேபோல் இஞ்சிப்பாறை பகுதியில் ஒரு தொழிலாளியை கரடி தாக்கியது.

அவரை பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.இது போன்று பிரச்சினைகள் வால்பாறை பகுதியில் உள்ளது.

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு அரசிடம் கோரிக்கை வைப்பதாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தெரிவித்தார். மேலும், இறந்த கர்ப்பிணி பெண் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



இந்த ஆய்வின்போது, பொதுநகரச் செயலாளர் மயில் கணேசன் நகர துணை செயலாளர் பொன் கணேசன் ஐடி விங் நகர செயலாளர் சண்முகம் ஆர் ஆர் பெருமாள். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் சசி, சுடர் பாலு, எஸ் கே எஸ் பாலு, மற்றும் பலர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...