அமித்ஷா- ஈபிஎஸ் சந்திப்பால் முடிவுக்கு வந்த அதிமுக பாஜக பனிப்போர்?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதன்மூலம், தமிழகத்தில் அதிமுக-பாஜக இடையே இருந்துவந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பொள்ளாச்சி: தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பிரச்சனை வெடித்தது.

அதில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், அதை தேர்தல் ஆணையமும் உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை இரண்டும் எடப்பாடி பழனிசாமி வசமானது.

இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுக கோரிவந்தது. ஆனால், பாஜக தனி வேட்பாளர் பட்டியலை அறிவித்ததைத் தொடர்ந்து, புலிகேசி தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதாக அதிமுக அறிவித்தது. புலிகேசி தொகுதியில் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.



இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில், நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அதிமுக பாஜக கூட்டணி குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை வகிப்பது எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்மூலம், தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிமுக-பாஜக இடையே நிலவிவந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களைத் தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துகொள்வோம் என்றார். ஓ.பி.எஸ் இன்னும் திமுகவின் பி-டீமாகத்தான் இருந்துவருகிறார் என்று குற்றம்சாட்டிய அவர், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சுதந்திரமாகச் செயல்படும் கட்சிகள் எனவும், திமுகவைப் போல் அடிமைக் கட்சி அல்ல என்றும் தெரிவித்தார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து உண்மைத்தன்மையை கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...