கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கோவையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை ஏழு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம் பல மாதங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை புதுப்பித்து தர பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வருகை புரிந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7 கோடி ரூபாய் மதிப்பில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.



அதன்படி, பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்பட்டு சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு மழை நீர் வடிகால் புதுபிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.



தற்போது இந்த புதுப்பிக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பழைய ஓடுதள பாதைகள் அனைத்தும் அகற்றப்பட்டு சிந்தடிக்ஓடுதள பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து தர வேண்டுமென விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...