கோவையில் ரூ.16 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த ஜோசியர் - நிலத்தை அதிரடியாக மீட்ட மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் போலி ஆவணம் மூலம் மாநகராட்சிக்கு சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரித்த வீட்டுமனை விற்பனையாளர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி. இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள பார்க் சைட் 36 சென்ட் நிலத்தை அவர் அபகரித்துள்ளார். இதனை அடுத்து கோவை மாநகராட்சி, மூன்று முறை நாராயணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசுக்கு பதிலளிக்காத நாராயணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



தற்போது, கோவை மாநகராட்சி ஜேசிபி வாகனம் மூலம் 36 சென்ட் இடமும் அதற்குள் கட்டப்பட்ட இரண்டு சென்ட் வீடு தரைமட்டம் ஆக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.



இதன் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாராயணசாமி இதேபோல போலியான ஆவணங்கள் தயாரித்து வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா? எனவும் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...