கோவையில் ரூ.16 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த ஜோசியர் - நிலத்தை அதிரடியாக மீட்ட மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் போலி ஆவணம் மூலம் மாநகராட்சிக்கு சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரித்த வீட்டுமனை விற்பனையாளர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி. இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள பார்க் சைட் 36 சென்ட் நிலத்தை அவர் அபகரித்துள்ளார். இதனை அடுத்து கோவை மாநகராட்சி, மூன்று முறை நாராயணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசுக்கு பதிலளிக்காத நாராயணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



தற்போது, கோவை மாநகராட்சி ஜேசிபி வாகனம் மூலம் 36 சென்ட் இடமும் அதற்குள் கட்டப்பட்ட இரண்டு சென்ட் வீடு தரைமட்டம் ஆக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.



இதன் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாராயணசாமி இதேபோல போலியான ஆவணங்கள் தயாரித்து வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா? எனவும் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...