வால்பாறையில் சத்துணவு சாப்பிட்ட 21மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 43 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு சத்து மாத்திரையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை சாப்பிட்ட ஒரு சில மாணவர்களுக்கு மாலை 3 மணி அளவில் லேசான தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டு உள்ளது.



இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஆட்டோ மற்றும் தனியார் வாகனம் மூலம் 21 குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும் சில தினங்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாகவும், அதை குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...