தாராபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

தாராபுரம் அருகே புதுப்பை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே கோவிலில் ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதுப்பை கிராமத்தில் பழமையான அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபா ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுப்பை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக பூஜை செய்யாமல் வந்தனர். இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் சார்பில் வருடம் தோறும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வந்தனர்.



இதனை பொறுத்துக் கொள்ளாத மூன்று குலத்தவர்கள் வேண்டுமென்றே பூஜையை நிறுத்துவதற்காக வழக்கு தொடர்ந்தனர். அப்போது இரு தரப்பினரும் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு அன்னதானம் நடைபெறும் போது கோவில் மண்டபத்தை பயன்படுத்தாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தரப்பினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்து வருவதாக குலத்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...