உடுமலை தனியார் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது

உடுமலையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் ரூ.4லட்சம் பணத்தை கொள்ளையடித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பிரபாகரனை(29) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் தனியார் நிறுவனத்தில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (32). இவர் உடுமலை எலைய முத்தூர் பிரிவில் அரசு கலைக் கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை வினியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 24ஆம் தேதி இரவு வேலையை முடித்துக்கொண்டு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரூ.4 லட்சத்து12 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பாலாஜி உடுமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த பிரபாகரன் (29) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பிரபாகரன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் அடங்கிய பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...