கோவையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி செல்போன் பறிப்பு - இளைஞர்கள் 3 பேர் கைது!

கோவை சுப்பிரமணியம்பாளையம் அருகே ஆட்டோ ஓட்டுனர் ஷேக் மொய்தீன் என்பவரை கத்தியால் தலையில் தாக்கிவிட்டு செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி பாரத், ரமேஷ்குமார் மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த கவுதம் சித்தார்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி செல்போனை பறித்துச் சென்ற இளைஞர்கள் மூவரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சுப்பிரமணியம்பாளையம் அருகேயுள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மொய்தீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து அவரது செல்போனை கேட்டுள்ளனர்.

அப்போது அவர் செல்போனை தர மறுத்ததால், அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் ஷேக் மொய்தீன் தலையில் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், காயமடைந்த ஷேக் மொய்தீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதனிடையே ஷேக் மொய்தீன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், ஷேக் மொய்தீனை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற கவுண்டம் பாளையத்தை சேர்ந்த மணி பாரத், ரமேஷ்குமார் மற்றும் சாய்பாபா காலனியைச் சேர்ந்த கவுதம் சித்தார்தன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...