கோவை மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.65க்கு உட்பட்ட பாரதி நகர்‌ முதல்‌ வீதியில்‌ மாநகராட்சி தூய்மை பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.65க்கு உட்பட்ட பாரதி நகர்‌ முதல்‌ வீதியில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌‌, கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்‌.



கோவை மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.63க்கு உட்பட்ட வள்ளியம்மை வீதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள மாநகராட்சி கழிப்பிடத்தை புனரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம்‌, ஜீவா நகரில்‌ ரூ.5.20 கோடி மதிப்பீட்டில்‌ 1,680 மீட்டர்‌ தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ கட்டுதல்‌ மற்றும்‌ சிறுபாலங்கள்‌, ரூ.1.8 கோடி மதிப்பிட்டில்‌ 850 மீட்டர் தொலைவிற்கு தார்‌ சாலை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணியை விரைவாக செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

அப்போது, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ ஜீவராஜ்‌, சுகாதார ஆய்வாளர்‌ சந்திரசேகர் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...