அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை - கோவையில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி கோவையிலிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.



கோவை: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த உறுப்பினரான இ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்திக்கும் நிகழ்வுக்கும், இதர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு, திமுக தொண்டர்கள் புத்தகங்கள் வழங்கியும் பொன்னாடைகள் வழங்கியும் உற்சாக முழக்கங்களை எழுப்பியும் வரவேற்பு அளித்தனர்.



தொண்டர்களின் அன்பளிப்புகளை பெற்றுக் கொண்ட அவர், பின்னர் சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டார்.

இந்நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். ஈரோட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இன்று இரவு அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...