கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் நகைக் கொள்ளை - குற்றவாளியை கைது செய்தது தனிப்படை!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மாரிமுத்து என்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டன. வேறு ஏதாவது திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சூலூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 23.02.2023 அன்று, 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட லைன் இன்ஸ்பெக்டர் எனக் கூறி, சோலார் பழுதுபார்ப்பதற்காக வந்தார். அப்போது, வீட்டில் இருந்த 9 சவரன் நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்தனர். அதன்பேரில், மாரிமுத்து என்றழைக்கப்படும் முத்துக்குமார் (வயது33) என்ற நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர் சூலூர், அன்னூர், கோவில்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 வீடுகளில் 30 சவரன் தங்கத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து தங்க நகைகளையும் மீட்டனர்.

இது தொடர்பாக பேசிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததோடு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...