அதிமுக நிர்வாகி வீட்டின் முன்பு விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதம் - ரூ.1.10 கோடி பணத்தை திருப்பித் தரக் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடிக்கும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளரைக் கண்டித்து, அவரது வீட்டின் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயி தமது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் தினேஷ் மற்றும் லோகேஸ். இவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் மூலனூர் நத்தப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் வீட்டின் முன்பு நேற்று அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இது குறித்துப் பேசிய ராமகிருஷ்ணன், “மூலனூரில் கோழி தீவனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர் தொழில் ரீதியாக என்னிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் பெற்றுள்ளார்.



ஆனால், அந்த பணத்தை 4 ஆண்டுகள் கடந்தும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே, குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறேன். தரவேண்டிய ரூ.1 கோடியே 10 லட்சத்தை திருப்பி தரும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...