கோவையில் மழைநீரில் ஆட்டம் போடும் முதியவர் - வைரல் வீடியோ..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து அருவி போல் கொட்டிய மழை நீரில் ஆனந்த குளியல் போட்ட முதியவரின் வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் மழைநீரில் முதியவர் குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் உயரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மேம்பாலப் பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையிலிருந்து இரவு வரை அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பெரியநாயக்கன்பாளையம் பிரதான சாலையிலுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.



அதுபோல அண்ணா நகர் பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இந்த தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூறினார். இந்த நிலையில் இன்று பாலத்தின் மீது இருந்த தேங்கிய தண்ணீர் கீழே விழுந்தது.

அருவி போல் அந்த மழை நீர் விழந்ததை பார்த்த அங்கிருந்த முதியவர் ஒருவர் உடனடியாக ஒடி அந்த மழை நீரில் ஆனந்த குளியல் போட்டார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இது தற்போது கோவையில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...