கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை மீட்பு - இறப்பிற்கான காரணத்தை அறிய இன்று உடற்கூறாய்வு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெண் யானை இறந்து நிலையில் மீட்கப்பட்டது. அந்த யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் இன்று உடற்கூறாய்வு செய்கின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு, மாங்குழி சுற்று, பெருக்குபதி சராகம், தடாகம் காப்புக்காட்டிற்குள்,

பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு வனவர் தலைமையிலான களப்பணியாளர்களின் வழக்கமான ரோந்து பணியின்போது வயது வந்த ஒரு பெண் யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.

அதில் யானையின் உடலில் காயங்களோ, வேறு அசாதாரண தடயங்களோ ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.

யானை இறப்பிற்கான காரணத்தை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் இன்று காலை உடற்கூறு ஆய்வு செய்யவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...