தாராபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதாக புகார் - பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கொடுக்கப்பட்ட குழந்தை தங்களுடையது அல்ல என பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய பெற்றோர், இறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான அபினவ் என்பவரின் மனைவி கீதா பிரசவத்திற்காக நேற்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தது.



பின்னர் அக்குழந்தையை புதைப்பதற்காக அரசு ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்துசெல்லப்பட்ட சிறிது நேரத்தில், குழந்தையை எடுத்து சென்றவர்கள், அதைப் புதைக்காமல் மருத்துவமனைக்கு திரும்பி வந்து மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் விசாரணை செய்தபொழுது, பிறந்த குழந்தையை மாற்றிவிட்டதாகவும், உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தைக்கு டி.என்.ஏ.பரிசோதனை செய்யவேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...