மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் - தாராபுரத்தில் ரேக்ளா மாட்டு வண்டிப் பந்தயம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக மற்றும் சின்னமலை குரூப்ஸ் இணைந்து ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை நடத்தியது. இதனை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சோமனூரில் இருந்து மண்டலபுதூர் செல்லும் சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரம் ஒன்றிய திமுக சின்னக்கம்பாளையம் பேரூர் கழக திமுக மற்றும் சலாம் பாளையம் சின்னமலை குரூப்ஸ் இணைந்து நடத்திய 14 ஆம் ஆண்டு ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், போட்டியை கொடியசைத்து தொடங்கி துவக்கி வைத்தார். தாராபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றிய தலைவருமான எஸ் வி செந்தில் குமார், கோவை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், ரேக்ளா சங்கத்தின் தலைவருமான பிரகாஷ் சின்னக்கம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.



200 மீட்டர் 300 மீட்டர் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தில், பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பழனி தாராபுரம் குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.



நிர்ணயிக்கப்பட்ட தூரங்களை குறிப்பிட்ட குறைவான மணித்துளிகளில் சென்றடையும் முதல் மூன்று காளை மாடுகளுக்கு தங்க காசுகள் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, சாலையில் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளுக்கு பின்னால் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...