பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வசந்தகால மலர் வழிபாடு - பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை ஏற்பாடு!

கோவையில் பிரசித்திபெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில் வசந்தகால மலர் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பட்டீஸ்வரரை தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பாக மலர் வழிபாடு நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக நடைபெறமால் இருந்த மலர் வழிபாடு இந்த ஆண்டு வெகு சிறப்பாக தொடங்கியது.



கோடை காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அர்த்த கால பூஜையாக இந்த பூஜை நடைபெற்றது. இதில், சுமார் 400 கிலோ அளவிலான அரிய வகை மலர்களை கொண்டு சிறப்பு மலர் வழிபாடு செய்யப்பட்டது.



தாமரை, அரளி, செண்பகம், பாரிஜாதம், வாடாமல்லி, வெச்சி, மருகு, மரிக்கொழுந்து, என 48 வகை மலர்களை கொண்டு மூலவரான சிவனுக்கு மலர் வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.



பட்டிநாயகர் சைவநெறி அறக்கட்டளை தலைவர், முனைவர் இலட்சுமிபதிராசு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...