பானிபூரியில் உப்பில்லை எனக் கூறி மதுபோதையில் தகராறு - பல்லடத்தில் பேக்கரி மீது பெட்ரோல் குண்டுவீச முயற்சித்த 4 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருந்தொழுவு என்ற இடத்தில் பானிபூரியில் உப்பு இல்லை எனக் கூறி பேக்கரி உரிமையாளரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர், பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் பெருந்தொழுவு என்ற இடத்தில் பத்து வருடங்களாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று திருப்பூரை சேர்ந்த அஸ்வின்,பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர்.

நான்கு பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளர் சதீஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பானிபூரி தட்டை தூக்கி வீசிவிட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த நால்வரும், காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பேக்கரி மீது வீசி உள்ளனர். பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில் அங்கிருந்து நால்வரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.



இது தொடர்பாக சதீஷ்குமார் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களில் திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன. பானிபூரியில் உப்பு இல்லை எனக் கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகளால் பெருந்தொழுவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...