கோவையில் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - ஆட்சியர் வெளியிட்டார்!

கோவை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இதனை வெளியிட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை பெற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார்.

கோவை மாவட்டத்திற்கு ஊரக பகுதியான மாவட்ட ஊராட்சியிலிருந்து 5 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியிலிருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கோயம்புத்தூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது.

அதன்படி மாவட்ட ஊராட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 மாநகராட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100, 7 நகராட்சிகளில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 198, 33 பேரூராட்சிகளில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 513 ஆக மொத்தம் 825 உறுப்பினர்கள் உள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி நகராட்சியில் 2 காலியிடங்களும், தாளியூர் பேரூராட்சியில் ஒரு காலியிடம் என மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. மேலும், 04.05.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...