கோவையில் தனியார் நிறுவன ஊழியரின் பைக் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை அரசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஷ்ணுவர்தன் என்பவரின் இருசக்கர வாகனத்தை, மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.



கோவை: கோவை அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். தனியார் நிறுவன ஊழியரான இவர், ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.

ஜெராக்ஸ் எடுத்துவிட்டு ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டு தப்பியோடினார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவர்தன், திருட்டு தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பைக் கொள்ளையில் ஈடுபட்ட நபரைத் தேடிவருகின்றனர்.

இந்த பைக் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...