கோவையில் வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் - மர்ம நபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே பாலதண்டாயுதபாணி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு நாயை, கற்களாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் மீது, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை காளப்பட்டி அருகே வளர்ப்பு நாயை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்மநபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காளப்பட்டி பாலாஜி நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (48). இவர் தனது வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலதண்டாயுதபாணி வீட்டு வளாகத்திற்குள் புகுந்து அவரது வளர்ப்பு நாயை கட்டை மற்றும் கல்லால் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

நாயின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது மர்ம நபர் நாயை தாக்கி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாலதண்டாயுதபாணி பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் அடிப்படையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயை கொடூரமாக தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...