கோவையில் தங்க நகை வியாபாரிகளிடம் பணம் கொள்ளையடித்த வழக்கு - மேலும் 2 பேர் கேரளாவில் கைது!

கோவை க.க.சாவடி அருகே கேரள நகை வியாபாரிகளான ரோகித் மற்றும் பரத் ஆகியோரிடம் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி ரூ.4.லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பிரமோத், சுனில் என மேலும் இருவரை தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.


கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரோகித், மற்றும் பரத்.

தங்க நகை வியாபாரிகளான இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 26 ஆம் தேதி 600 கிராம் தங்கத்தை கோவை ராஜவீதியை சேர்ந்த மொத்த நகை வியாபாரியான நந்த கணேஷ், என்பவரிடம் விற்று விட்டு பணத்தை பெற்றனர். பின்னர் கோவையிலேயே தங்கிவிட்டு மறுநாள் அதிகாலை, தங்களது இருசக்கர வாகனத்தில் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

க.க.சாவடியில் இருந்து வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே செல்லும்போது, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த ரூ.4 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இது தொடர்பாக பரத் க.க.சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த பாலக்காட்டை சேர்ந்த மிதூன் (வயது28), ரஞ்சித்(வயது22) அபினேஸ்(வயது27), ரஞ்சித்குமார்(வயது32) ஆகிய நான்கு பேரை ஞாயிற்றுகிழமை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடி கேரளாவில் முகாமிட்ட தனிப்படை போலீசார், பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த பிரமோத் (வயது34), சுனில் (வயது46) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். இருவரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...