தமிழகத்தில் தொடர்மழை எதிரொலி - கோவையில் மல்லிகைப்பூ விலை உயர்வு

தமிழகத்தில் பெய்துவரும் தொடர்மழையால், கோவை பூமார்கெட்டில் மல்லிகைப் பூ இன்று அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ. 600க்கு விற்பனையாகிறது. இதேபோல், முல்லை கிலோ ரூ.240க்கும், சாமந்தி கிலோ ரூ.380க்கும் விற்கப்பட்டது.


கோவை: வடகோவை பகுதியில் உள்ள பூமார்க்கெட் டுக்கு நீலகிரி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நாள்தோறும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கோடை காலம் தொடங்கியது முதல் பூக்கள் உற்பத்தி அதிகரித்ததால், உதிரிப்பூக்களின் விலை வீழ்ச்சியடைந்து இருந்தது. அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக, மல்லிகை விலை கிலோ 300 ரூபாய்க்கு மேல் உயரவில்லை. இதேபோல், மற்ற உதிரிப்பூக்களும் குறைந்த விலைக்கே விற்பனையானது.

இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பூக்கள் உதிர்ந்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவை பூ மார்க்கெட்டுக்கு வரும் மல்லிகைப்பூ வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது.

2 மாதங்களாக ரூ.300 ஆக இருந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ நேற்று ரூ. 600க்கு விற்பனையானது.

இதேபோல், சாமந்தி கிலோ, 380 ரூபாய்க்கும், முல்லை கிலோ, 240 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ, 320 ரூபாய்க்கும், சம்பங்கி 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...