ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் - பல்லடம் காவல்நிலையத்தில் புகார்!

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்தப் பேருந்து பல்லடம் அருகே வந்தபோது, சூலூரில் இருந்து பயணித்த இளைஞர் ஒருவர், அதே பேருந்தில் பணி முடிந்து கோவை ஒண்டிப்புதூரில் இருந்து வீடு திரும்பிய பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனால், அந்தப் பெண் பேருந்து ஓட்டுனரிடம் பேருந்தை பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால், பயணிகளோடு அரசு பேருந்து ஓட்டுநர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அந்த இளைஞரிடம் மகளிர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென பயணிகளோடு அரசு பேருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...