கோவை அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு - எம்.எல்.ஏ அருண்குமார் பங்கேற்பு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அதிமுக நகர கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதி, அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ கலந்துகொண்டு, மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.



கோவை: தமிழகத்தில் நிலவிவரும் கோடை வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் தணிக்கும் விதமாக, அதிமுக சார்பாக ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக நகர் கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மற்றும் முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

நீர் மோர் பந்தலை அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்,



பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவர் மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பி.ஏ, வேலுசாமி, வி.லட்சுமணசாமி, வி.சிவகுமார், முத்துசாமி, சம்பத்குமார், பி.எம்.நாகராஜ், சண்முகம், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...