கோவை பன்னிமடையில் கிராம நிர்வாக அலுவலகம் திறப்பு - திரளாக கலந்துகொண்ட பொதுமக்கள்!

கோவை பன்னிமடையில் பொதுமக்கள் நிதியில் ரூபாய்.2.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், அரசியல்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. பன்னிமடை, கணுவாய், தாளியூர், கஸ்தூரிநாயக்கன்புதூர் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த அலுவலகம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த இந்த அலுவலக கட்டிடத்தை புதுப்பிக்க பன்னிமடை கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் இணைந்து ரூ.2.25 லட்சம் பணத்தை திரட்டினர்.

தொடர்ந்து அவர்கள் இரவு-பகல் என பாராமல் அலுவலக கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இடித்து புதியதாக கட்டினர். மேலும்,அங்கு பாத்ரூம், தண்ணீருக்காக மோட்டார் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக புதிய கிராம நிர்வாக அலுவலகம் போர்டு என அனைத்தும் உருவாக்கப்பட்டது.



இந்த புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவகக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக ஒன்றிய செயலாளர் சி.எம்.கே.கிருஷ்ணகுமார், துடியலூர் வருவாய் அலுவலர் சரத், பன்னிமடை கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி கவுன்சிலர்கள் பி.டி.கோபாலசாமி, தங்கராஜ், சிவகுமார், சாந்தி, மாரித்தாய், ஜெயமணி,



அஞ்சல் அதிகாரி டி.பி.ராஜேந்திரன் குடும்பத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள் தண்டபாணி, சம்பத்குமார், மகேந்திரகுமார், ராஜசேகரன், விஜயகுமார், அய்யாசாமி, காளியப்பன், துடியலூர் கிராம நிர்வாக அலுவலர் காட்டுதுரை, அலுவலர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...