விலங்குவதைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு - கோவை காவல் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்பு

கோவை மாவட்ட காவல்துறையினருக்கு விலங்குகள் மீதான குற்றத்தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம்பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், காவல்துறையைச் சேர்ந்த 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியான நடைவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள கோவை மாவட்ட காவல் துறையினருக்கு



DOGS OF COIMBATORE என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கேசிகா ஜெயபாலன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீனாட்சி, மதுமிதா மற்றும் விலங்கு நல ஆர்வலர் ஆண்டனி ரூபின்குழு உதவியுடன் விலங்குகள் மீதான குற்றம் தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம் பற்றி விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தொடங்கிவைத்து, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி அவர்களை விலங்கு நல தொடர்பு அதிகாரிகளாகவும் நியமித்தார்.

மேலும், Society for Prevention of Cruelty to Animals என்ற தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் கோவை மாவட்ட காவலர்களுக்கு, மிருகங்கள் சித்திரவதை தொடர்பாக வரும் புகார்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கி, 14 சட்ட விதிகள் அடங்கிய போஸ்டர்களை காவல் நிலையத்தில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சிபிஎஸ்பிசிஏ, டாக்டர் கே. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...