அன்னூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநிலத்தவர் கைது!

அன்னூர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வநாத்ஜெனா மகன் பிரபுல்லகுமார் ஜெனா (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: அன்னூர் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 1.100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மாணிக்கம்பாளையம் நாயக்கரா பெட்ரோல் பங்க் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வநாத்ஜெனா மகன் பிரபுல்லகுமார் ஜெனா (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...