கோவையில் வாய்த்தகராறில் சிறுவன் மீது தாக்குதல் - மற்றொரு சிறுவன் கைது

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக பள்ளி சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தன்னுடன் படித்த சிறுமியை காதலித்து வந்தார்.

இதனால், சிறுவனுக்கும், சிறுமியின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சிறுமியின் அண்ணன் அச்சிறுவனை தாக்கியுள்ளார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்ததுள்ளது.

அங்கு சிறுவன் மற்றும் அவரது நண்பர் ஜெகதீஷ் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிறுமியின் அண்ணன் மீண்டும் அச்சிறுவனை அழைத்து தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அதை தடுக்க சென்ற நண்பர் ஜெகதீஷை, சிறுமியின் அண்ணன் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...