தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக போராட்டம் - கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கைது!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்டதை கண்டித்து, மாலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்த நிலையில், தமிழக அரசு இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



கோவை: கோவை சரவணம்பட்டி அருகே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அந்த கட்சியின் மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் தனியார் மாலினை முற்றுகையிட முயன்றனர்.



ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.



அப்போது போராட்டகாரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.



இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசு இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், தொடர்ந்து இந்த திரைப்படம் திரையிட்டால் திரையரங்குக்குள் புகுந்து திரைப்படத்தை வெளியிடாமல் தடை செய்வோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே தனியார் மால் பகுதிக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...