கோவை மாவட்டத்தில் 38 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்


பிளஸ்-2 தேர்வு தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வரும் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் இருந்து 38 ஆயிரத்து 218 மாணவர்கள் எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 346  பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். கோவை கல்வி மாவட்டத்தில் 72, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 23 என மொத்தம் 95 தேர்வு மையங்களில் சுமார் 1800 தேர்வு அறைகளில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 303 பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தேர்வு நடக்கும் மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 

மேலும், பிளஸ்-2 தனித் தேர்வை கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து மற்றும் தட்கலில் விண்ணப்பித்தவர்கள் என மொத்தம் 2273 தனித் தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...