ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு கோவையில் விண்ணப்பங்கள் விநியோகம் 6ம் தேதி துவக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்- 2 முறையே 2017 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரால் வரும் மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த விண்ணப்பங்களை பெற கட்டணமாக ரூ.5 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.

இதுகுறித்தான மேலும் தகவலுக்கும் விற்பனை மையங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளவும், மாவட்ட வாரியான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கோவை மாவட்டத்தில், முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள வின்சென்ட் சாலையில் செயல்பட்டு வரும் நல்லாயன் உயர்நிலைப் பள்ளி மற்றும் பாலக்காடு சாலையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் வரும் 6ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர திரும்பப் பெறப்படும்.

விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...