தீண்டாமை சுவற்றை அகற்ற கோரி திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள அருந்ததியர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: தீண்டாமை சுவரை அகற்ற கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டையங்கிணறு ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலத்தினை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறது.

விற்பனை செய்யும் வீட்டு மனைகளை ஒட்டி தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் மக்கள் வசிப்பதால் வீட்டு மனைகளை விற்பனை செய்ய முடியாது என எண்ணி அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியை ஒட்டி சுமார் 10 அடி உயரம் வரை சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சுவரை ஒட்டி சாக்கடை தண்ணீர் மற்றும் மரம் செடிகள் வைத்து அதற்கும் தண்ணீர் அதிகமாக ஊற்றி வருவதால், அருந்ததியினர் மக்கள் வசிக்கும் பகுதி களிமண் பூமி என்பதால் தண்ணீரின் ஈரம் பட்டு 20க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் விட்டு இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.



எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தீண்டாமை சுவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...