கூடலூர் நகராட்சி சார்பில்  திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் - திமுகவினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

கோவை  வடக்கு மாவட்ட கூடலூர் நகர திமுக சார்பாக திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றுவருவதாக கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.



கோவை: கோவை சாமிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கூடலூர் நகராட்சி தலைவர் மற்றும் நகரசெயலாளர் அறிவரசு தலைமை வகித்தார்.

அப்போது வரிவசூல் செய்வதில் சுமார் 70 நாட்களில் கூடலூர் நகராட்சி தமிழகத்தில் 2வது இடத்தை பெற்றுள்ளதாகக் கூறினார்.



பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நல திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும்,கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் மற்றும் முதியோர் ஆகியோருக்கு தனித்தனி திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது. எனவே வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.



அதைத் தொடர்ந்து, கோவை வடக்கு மாவட்டசெயலாளர் தொண்டாமுத்தூர்அ.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ.தர்மலிங்கம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் பா.அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இந்தப் பொதுக்கூட்டத்தில் கூடலூர் நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...