காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்டவர் திருநங்கை..! - மருத்துவ பரிசோதனையில் தகவல்!

கோவை காந்திபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இறந்த திருநங்கை யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் பகுதியில் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் திருநங்கை என்பது, மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில் சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த நபரை உடலை மீட்டனர்.



இதனையடுத்து, இறந்தவர் யார் என்பது குறித்தும் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை துவங்கினர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பது தெரியவந்துள்ளது.



இருப்பினும் அவர் யார்? எதற்கு வந்தார் என்பதும்,திருநங்கை சடலமாக மீட்கப்பட்ட இடம் இறுதியாக யார் பயன்பாட்டில் இருந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் சாலையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...