கோவை அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை ஈச்சனாரி அருகே இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்ற தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் முத்து செல்வம் (வயது26).

இவர் கோவை ஈச்சனாரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி மலுமிச்சம்பட்டியில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் பணி முடிந்து இரவு 11.30 மணியளவில் தனது அறைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, ஈச்சனாரி மேம்பாலத்தை கடந்து சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடுப்பில் மோதாமல் இருக்க, வலது புறமாக அவர் தமது இரு சக்கர வாகனத்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த இரு சக்கர வாகனம் சாலை நடுவே இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த முத்துச்செல்வத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...